ஆழ்கடல் போல் பேரன்பினால்
வெள்ளம் போல் மாதயையால்
மீட்கவே மீட்கும் பொருளாய்
மீட்பர் இரத்தம் சிந்தினார்
இவ்வன்பை நினைந்து துதி
பாடாதோர் யாரும் உண்டோ?
விண்ணை சேரும் நாள் வரைக்கும்
அன்பரை மறப்பாரோ?
கல்வாரி மலையின் ஊற்றே
ஆழ்ந்தகன்று தோன்றுதே
நல் இரக்கவாசல் தோறும்
அன்பின் அலை பாயுதே
மா நதியாய் அன்பு தயை
ஒய்வின்றி பொழியுதே
தேவ நீதி சாந்தம் அன்பால்
பூவினை முத்தம் செய்யும்.